ADDED : ஜூன் 12, 2024 10:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : உடுமலை ஒன்றியம் குறிச்சிக்கோட்டை ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன், தனியார் 'பார்' அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் கலெக்டரிடம் நேற்று மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது:
உடுமலை ஒன்றியம், குறிச்சிக்கோட்டையில், தனியார் ஓட்டலில் 'பார்' அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அருகிலேயே பள்ளி, குடியிருப்புகள் உள்ளன.
ஏற்கனவே அப்பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது; அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, தனியார் பார் அமைக்க அனுமதி அளிக்க கூடாது.