sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆளை 'விழுங்க காத்திருக்கும்' அபாயம்  

/

ஆளை 'விழுங்க காத்திருக்கும்' அபாயம்  

ஆளை 'விழுங்க காத்திருக்கும்' அபாயம்  

ஆளை 'விழுங்க காத்திருக்கும்' அபாயம்  


ADDED : ஆக 04, 2024 11:26 PM

Google News

ADDED : ஆக 04, 2024 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தடுமாற்றம்

சந்திராபுரம் - செவந்தாம்பாளையம் ரோட்டில் வேகத்தடைகளுக்கு வெள்ளை பெயின்ட் அடிக்க வேண்டும். வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.

- மோகன், செவந்தம்பாளையம்.

மந்தம்

ஆலாங்காடு, சாயப்பட்டறை வீதியில் கால்வாய் அமைக்கும் பணி மந்தமாக நடக்கிறது. குடிநீர் குழாய்களை சரிசெய்யாமல் பணி மேற்கொள்கின்றனர்.

- கந்தசாமி, ஆலாங்காடு. (படம் உண்டு)

அவசர கதி

வெள்ளியங்காடு, திரு.வி.க., நகரில் குழாய் உடைந்து, தண்ணீர் வீணாகிறது. சரிசெய்யாமல் அவசர கதியில் சாலைப்பணியை துவக்குகின்றனர்.

- கர்ணன், வெள்ளியங்காடு. (படம் உண்டு)

ஆபத்து

பூலுவபட்டி - நெருப்பெரிச்சல் ரோடு, அரச மரத்தடி விநாயகர் கோவில் அருகே, சாக்கடை சிலாப் சேதமாகியுள்ளது. எந்நேரமும், யாராவது விழுந்து விடும் அபாயம் உள்ளது.

- மனோகரன், அம்மன் நகர். (படம் உண்டு)

நாய்த்தொல்லை

பூலுவபட்டி - ஊத்துக்குளி ரோடு, படையப்பா நகர், கே.ஜி.எஸ்., கார்டன் பகுதியில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது.

- பாண்டியராஜ், கே.ஜி.எஸ்., கார்டன். (படம் உண்டு)

வீண்

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, இரண்டாவது ரயில்வே கேட் எதிர்ப்புற வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் தொடர்ந்து வீணாகி வருகிறது.

- பொன்னுசாமி, ஊத்துக்குளி ரோடு (படம் உண்டு)

அவிநாசி - திருப்பூர் மெயின் ரோடு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்புறம் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலையும் சேதமடைந்து வருகிறது.

- தென்னவன், அவிநாசி.

சபாபதிபுரம் ரயில்வே பாலத்தின் மேல் குழாய் உடைந்து தண்ணீர், நாள் முழுதும் வழிந்தோடுகிறது. சரிசெய்ய வேண்டும்.

- சந்தோஷ் ராகவ், சபாபதிபுரம்.

சுகாதாரக்கேடு

பல்லடம், கணபதிபாளையம் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை, கூட்டுறவு சங்க அலுவலகம் அருகே குப்பை நிரம்பியுள்ளது. குப்பை அள்ள வேண்டும்.

- சிவம், கணபதிபாளையம். (படம் உண்டு)

இருள்

கொடுவாய் கிழக்கு வீதி, சந்தை ரோடு, அண்ணா நகர், மகிரிஷி நகர் பகுதிகளில் ஒரு வாரமாக தெருவிளக்குகள் எரிவதில்லை. இருள்சூழ்ந்து காணப்படுகிறது.

- சதீஷ்குமார், கொடுவாய். (படம் உண்டு)

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் ஸ்டாப், உயர்மட்ட பாலத்தில் தெருவிளக்குகள் எரிவதில்லை. திருட்டு பயத்துடன் பாதசாரிகள் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

- சுப்ரமணி, அணைக்காடு. (படம் உண்டு)

அடைப்பு

அனுப்பர்பாளையம், 10வது வார்டு, மாரியம்மன் கோவில் வீதியில், ஏ.வி.பி., ரோட்டில் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.

- சீனிவாசன், அனுப்பர்பாளையம். (படம் உண்டு)

இடையூறு

திருப்பூர், அவிநாசி ரோடு, குமார் நகர் ஸ்டாப்பில் போக்குவரத்துக்கு இடையூறாக குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தொட்டியை இடமாற்ற வேண்டும்.

- தவச்செல்வம், குமார் நகர். (படம் உண்டு)

ரியாக் ஷன்

தற்காலிக சீரமைப்பு

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் பாலத்தின் கீழ் குழாய் உடைந்து தண்ணீர் சேதமானது. 'தின மலர்' நாளிதழில் செய்தி வெளியான பின், தற்காலிகமாக மண் கொட்டி சீரமைத்துள்ளனர்.

- நடராஜன், தியாகி குமரன் காலனி. (படம் உண்டு)

கால்வாய் சுத்தம்

திருப்பூர், பாரப்பாளையம், திருநகர் இரண்டாவது வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கியிருந்தது. 'தின மலர்' நாளிதழில் செய்தி வெளியானதும், கால்வாய் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

- அக் ஷயா, பாரப்பாளையம். (படம் உண்டு)






      Dinamalar
      Follow us