sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரூ.4 கோடி நிதியுதவி இலக்கு: 'டாப்செட்கோ' தலைவர் தகவல்

/

ரூ.4 கோடி நிதியுதவி இலக்கு: 'டாப்செட்கோ' தலைவர் தகவல்

ரூ.4 கோடி நிதியுதவி இலக்கு: 'டாப்செட்கோ' தலைவர் தகவல்

ரூ.4 கோடி நிதியுதவி இலக்கு: 'டாப்செட்கோ' தலைவர் தகவல்


ADDED : செப் 12, 2024 12:31 AM

Google News

ADDED : செப் 12, 2024 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில், 'டாப்செட்கோ' சார்பில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு, 4 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ) சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். 'டாப்செட்கோ' இயக்குனர் வெங்கடேஷ்,எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் மற்றும் அனைத்துதுறை அதிகாரிகள் பங் கேற்றனர்.

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் காஜாமுகைதீன், திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கடன் திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்திய பின், பேசியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் கடை அமைக்க கடன் கேட்டு ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். சிலர், கடை அமைப்பது உள்ளிட்ட சுய தொழில் துவங்குவதற்காக வழங்கும் கடன் தொகையை, திருமணம் உள்ளிட்ட வேறு தேவைக்கு பயன்படுத்தி விடுகின்றனர். எனவே, சரியான பயனாளிகளை தேர்வு செய்து, கடன் வழங்க வேண்டும்.

மக்களுக்கு தேவையான கடனுதவிகளை பரிந்துரைக்க வேண்டும். மக்கள் பிரதிநிநிதிகளின் பரிந்துரைகளை ஏற்று, தகுதியானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2023 - 24ம் ஆண்டில், 'டாப்செட்கோ' வாயிலாக, 2 கோடி ரூபாய்மதிப்பில் கடன் நலத்திட்டங்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அதில், மொத்தம், 744 பயனாளிகளுக்கு, 3 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டு, இலக்கை கடந்துள்ளோம். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் 1,682 பேருக்கு, 115.5 கோடி ரூபாய் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில், திருப்பூர் மாவட்டத்தில், 'டாப்செட்கோ' மூலம், 4 கோடி ரூபாய் மதிப்பில் கடனுதவிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், மூன்று பேருக்கு போர்வெல் அமைக்க, மொத்தம் 2.9 லட்சம் ரூபாய், ஐந்து பேருக்கு, தையல் மெஷின்கள் வழங்கப்பட்டன. அருள்புரத்தை சேர்ந்த பிரனேஷ் என்பவருக்கு, நீட்ஸ் திட்டத்தில், 2.62 கோடியில் பிரின்டிங் நிறுவனம் துவங்க, 63 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டது.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலு வலர் செல்வி நன்றிகூறினார்.

எம்.எல்.ஏ., பேச்சால் 'டென்ஷன்'

திருப்பூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் என்கிற நிறுவனம் இருப்பதே பலருக்கும் தெரியவில்லை. துறை சார்ந்த அலுவலர்கள் இதுகுறித்து விளம்பரப்படுத்த வேண்டும் என தலைவர் காஜாமுகைதீன் பேசினார்.

அதற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், 'நாங்க விழிப்புணர்வு ஏற்படுத்த தயாராதான் இருக்கிறோம். விளம்பரப்படுத்தினால், அதிக கடன் வழங்கவேண்டியிருக்கும். திருப்பூருக்கு நீங்க கொடுக்கின்ற கடன் தொகை போதாது; கூடுதல் தொகை கொடுங்க,' என்றார்.

எம்.எல்.ஏ.,வின் பேச்சை கேட்டு, டென்ஷனான காஜா முகைதீன், 'அதனை நாங்க பார்த்துக்குறோம்,' என, கடுகடுப்பான குரலில் பதிலளித்தார். மேடையில் நடந்த இந்த விவாதத்தால், அரங்கமே அமைதியானது.






      Dinamalar
      Follow us