/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊரக வளர்ச்சி அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
/
ஊரக வளர்ச்சி அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
ஊரக வளர்ச்சி அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
ஊரக வளர்ச்சி அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
ADDED : ஆக 23, 2024 12:31 AM

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி அலுவலர்கள் நேற்று தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் தொடர்கின்றனர்.
ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுதும் இரண்டு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நேற்று துவங்கியது.
வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்கவேண்டும். கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கும் திட்டங்களுக்கு உரிய பணியிடங்களை ஏற்படுத்தவேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..
திருப்பூர் மாவட்டத்தில், 13 ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் ஊராட்சி செயலர்கள், பி.டி.ஓ.,க்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலக பணியாளர்கள், மொத்தம் 396 பேர் நேற்று முதல் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், ஊரக வளர்ச்சி அலுவலகம், ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ஊராட்சிகளில் வரி வசூல், ஒன்றிய அலுவலகங்களில் கனவு இல்ல திட்டம் சார்ந்த அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
---
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தால், திருப்பூர், கோர்ட் வீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடியது.

