sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கள் இறக்கும் உரிமை முதல்வரிடம் பரிந்துரை: எம்.பி., உறுதி

/

கள் இறக்கும் உரிமை முதல்வரிடம் பரிந்துரை: எம்.பி., உறுதி

கள் இறக்கும் உரிமை முதல்வரிடம் பரிந்துரை: எம்.பி., உறுதி

கள் இறக்கும் உரிமை முதல்வரிடம் பரிந்துரை: எம்.பி., உறுதி


ADDED : ஆக 23, 2024 10:17 PM

Google News

ADDED : ஆக 23, 2024 10:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்:பல்லடம் அடுத்த, நாதகவுண்டம்பாளையத்தில் முன்னாள் விவசாய சங்க தலைவர் என்.எஸ்.பழனிசாமி மணிமண்டபத்துக்கு, நேற்று வந்த கோவை எம்.பி., ராஜ்குமார், என்.எஸ்.பழனிசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் பேசுகையில், ''கோவை, திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. தமிழகத்தில், 40 எம்.பி.,க்களை பெற்றுள்ள நீங்கள், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்கும் அனுமதியை மத்திய அரசிடம் போராடி பெற்றுத் தர வேண்டும். 'கள்'ளுக்கான தடையை நீக்க வேண்டும். ஆனைமலை -- நல்லாறு திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும்'' என்றார்.

எம்.பி., பேசுகையில், ''கள் இறக்கும் உரிமை, விவசாயிகளுக்கு கிடைக்க, நிச்சயம் முதல்வரிடம் பரிந்துரைப்பேன். கள் இறக்கினால் தான் விவசாயிகள் கொஞ்சம் காசு பார்க்க முடியும் என்பது தெரியும். இதிலுள்ள அரசியல் உங்களுக்கும், எனக்கும் தெரியும்.

கோவையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே, சர்வதேச விமான நிலையம் அமைக்க, மத்திய அரசிடம் நிலத்தை ஒப்படைக்க முதல்வர் ஒப்புக்கொண்டார். ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால், விவசாயிகள் முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்வேன். இரு மாநிலங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்பதால், ஆனைமலை-- நல்லாறு திட்டம் தள்ளிப்போகிறது; திட்டத்தை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.






      Dinamalar
      Follow us