sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சர்வோதய சங்க ஊழியர்களுக்கு சங்கடம் விற்பனை மையத்தை மூடி போராட்டம்

/

சர்வோதய சங்க ஊழியர்களுக்கு சங்கடம் விற்பனை மையத்தை மூடி போராட்டம்

சர்வோதய சங்க ஊழியர்களுக்கு சங்கடம் விற்பனை மையத்தை மூடி போராட்டம்

சர்வோதய சங்க ஊழியர்களுக்கு சங்கடம் விற்பனை மையத்தை மூடி போராட்டம்


ADDED : செப் 03, 2024 11:47 PM

Google News

ADDED : செப் 03, 2024 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;தமிழ்நாடு சர்வோதய சங்க நிர்வாகத்தின் மெத்தனத்தை கண்டித்து, விற்பனை மைய ஊழியர்கள், மையங்களை பூட்டி, சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு சர்வோதய சங்கம், திருப்பூர், அவிநாசி ரோடு, காந்தி நகரில் தலைமை அலுவலகத்துடன் செயல்படுகிறது. இதன் விற்பனை மையங்கள், காந்தி நகர், ஈஸ்வரன் கோவில் வீதி, வீரபாண்டி ஆகிய இடங்களில் உள்ளது. இவற்றில், காலணி, மர பர்னிச்சர், கைவினை பொருள், கதர் துணி ஆகியன விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடந்த, 2 ஆண்டாக இச்சங்கம் சார்பில் எந்த பொருளும் உற்பத்தி செய்யப்படாமல் உற்பத்தி மையங்கள் மூடிக்கிடக்கின்றன. இதனை நம்பி உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் வேறு வேலை தேடிச் செல்கின்றனர். இதனால், விற்பனை மையங்களில் விற்பனை பாதிக்கிறது.

மையங்களுக்கு பொருள் உற்பத்தி செய்தவர்களுக்கு உரிய தொகை வழங்கப்படாமல் உள்ளது உட்பட பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இதற்கு தீர்வு காணக் கோரி, விற்பனை மையங்களை பூட்டி விட்டு அதன் ஊழியர்கள் நேற்று சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்வோதய சங்க ஊழியர்கள் கூறியதாவது:

சங்க நிர்வாகம் எதையும் கண்டு கொள்வதில்லை. வெறும் கட்டட வாடகையை மட்டும் வாங்கி அலுவலக நிர்வாகத்தை நடத்துகின்றனர். சங்கத்தின் சொத்துகள் பலவகையில் பறிபோகிறது. இவற்றுக்கு தீர்வு காண வலியுறுத்தி, நிர்வாகத்தை கண்டித்து அஹிம்சை வழியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துகிறோம்.

பண்டிகை காலம் என்பதால், விற்பனை மையங்களில் கூடுதல் வியாபாரம் நடக்கும். ஆனால், சங்க நிர்வாகம் இது குறித்து எந்த அக்கறையும் செலுத்தவில்லை. உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் தகவல் அறிந்து செயலாளர் அலுவலகத்துக்கே வராமல் உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

உள்நோக்கம்கொண்ட போராட்டம்


இது குறித்து சங்க செயலாளர் சரவணனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:

சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் சில தீர்மானங்கள் பெரும்பான்மை அடிப்படையில் நிறைவேற்றப்பட்டது. இதில், 55 உறுப்பினர்கள் ஆதரவும், 6 பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர். பொதுக்குழுவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிலர் ஊழியர்களை போராட துாண்டி விட்டிருக்கலாம். நான் அலுவலக பணியாக சென்னை வந்து விட்டதால், அலுவலர்களைக் கொண்டு ஊழியர்களை பணிக்குச் செல்ல அறிவுறுத்தினேன். நாளை (இன்று) திரும்பியவுடன், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us