ADDED : மார் 21, 2024 10:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை - பழநி ரோட்டில் சென்டர்மீடியனில் வளர்க்கப்படும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை - பழநி ரோட்டில் சென்டர்மீடியனில் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால், செடிகள் தண்ணீரின்றி வாடி, வதங்கி வருகின்றன.
எனவே, உடுமலை நகராட்சி அதிகாரிகள் இச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

