ADDED : மார் 29, 2024 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்;அவிநாசிபாளையத்தில் உள்ள ஜெய்ஸ்ரீ ராம் பொறியியல் கல்லுாரியில், பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி மற்றும் உதவித்தொகை வழங்குவதற்கான தகுதி தேர்வு நடந்தது.
திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் முதல், 50 இடத்தை பெற்ற மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில், 'மைன்ட் பிரஷ் ட்ரெயினிங்' மைய கீர்த்தன்யா, கல்லுாரி தலைவர் கோவிந்தசாமி, துணைத்தலைவர் கருப்பண்ணசாமி, கல்லுாரி முதல்வர் திருமலை, நிர்வாக அலுவலர் சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

