/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு
/
பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு
ADDED : ஆக 25, 2024 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூர், குமரானந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு மறுதேர்தல் நடந்தது. சிறுபூலுவப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி, தேர்தல் பார்வையாளராக பங்கேற்றார்.
குமரானந்தபுரம், பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி முன்னிலை வகித்தார். மாநகராட்சி, 22வது வார்டு கவுன்சிலர், ராதாகிருஷ்ணன், 21வது கவுன்சிலர், பத்மாவதி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் குமார் உள்ளிட்ட 24 பேர் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

