sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பெண்ணின் கணவரை கடத்தி மிரட்டல் 3 போலீசார் உட்பட ஆறு பேர் கைது

/

பெண்ணின் கணவரை கடத்தி மிரட்டல் 3 போலீசார் உட்பட ஆறு பேர் கைது

பெண்ணின் கணவரை கடத்தி மிரட்டல் 3 போலீசார் உட்பட ஆறு பேர் கைது

பெண்ணின் கணவரை கடத்தி மிரட்டல் 3 போலீசார் உட்பட ஆறு பேர் கைது


ADDED : ஆக 23, 2024 02:42 AM

Google News

ADDED : ஆக 23, 2024 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர், தாராபுரம் ரோட்டை சேர்ந்த 26 வயது இளம்பெண், தன் கணவர் மற்றும் குழந்தையுடன் வசிக்கிறார்.

நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு கோவில்வழி அருகே குழந்தையுடன் நடந்து சென்றார். ரோந்து வந்த நல்லுார் எஸ்.ஐ., பரஞ்ஜோதி, இளம்பெண்ணிடம் விசாரித்தார். 'என் கணவரை போலீசார் அழைத்துச் சென்றனர்.

வீட்டில் இருந்த மொபைல் போனையும் எடுத்துச் சென்று விட்டனர்' என, அப்பெண் கூறினார்.

இத்தகவல் போலீஸ் கமிஷனர் லட்சுமிக்கு தெரிய வர, தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. பெருமாநல்லுாரில் உள்ள ஒரு வீட்டில், அப்பெண்ணின் கணவரை அடைத்து வைத்திருப்பது தெரிந்தது.

போலீசார் கூறியதாவது:

அந்த பெண் வீட்டுக்கு முதலில் மூவரும் போலீஸ் சீருடையில் தொடர்ந்து நள்ளிரவில் சென்றனர்.

வீட்டில் இருந்த இரு மொபைல் போன்களை எடுத்துக்கொண்டு, '1 லட்சம் ரூபாய் கொடுத்து, கணவரை மீட்டுக் கொள்' என்று மிரட்டி, பெண்ணின் கணவரை அழைத்துச் சென்றனர். பெருமாநல்லுாரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணின் கணவர் உட்பட மூன்று பேரை மீட்டோம்.

கடத்தலில் தொடர்புடைய திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரர்கள் கோபால்ராஜ், 33, சோமசுந்தரம், 33, நீலகிரி மாவட்டம், சோலுார் மட்டம் ஸ்டேஷனை சேர்ந்த போலீஸ்காரர் லட்சுமணன், 32, மற்றும் சேலத்தை சேர்ந்த ஜெயராமன், 20, ராசிபுரத்தை சேர்ந்த ஹரிஷ், 25, அருண்குமார், 24, என, ஆறு பேரை கைது செய்து உள்ளோம்.

போலீஸ்காரர் லட்சுமணனுக்கு, ஹரிஷ், அருண்குமார், ஜெயராமன் ஆகியோரின் தொடர்பு கிடைத்தது. மூவரும் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருபவர்களை கண்காணித்து, வாடிக்கையாளர் போல சென்று பணம் பறிப்பது தெரிந்தது. அதன் படி, போலீஸ்காரர்கள் கோபால்ராஜ், சோமசுந்தரம், லட்சுமணன் மூவரும் சென்று அப்பெண்ணை மிரட்டி, 1 லட்சம் ரூபாய் கேட்டு கணவரை கடத்தி சென்றனர்.

ஏற்கனவே இவர்கள், பெருமாநல்லுாரில் உள்ள ஒரு வீட்டில், ஈரோட்டிலிருந்து கடத்தி வந்த, திருச்சியை சேர்ந்த தனபால் சிங், 47, ஈரோட்டை சேர்ந்த முருகன், 42, ஆகியோருடன் பெண்ணின் கணவரையும் அடைத்திருந்தனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கைது செய்யப்பட்ட மூன்று போலீஸ்காரர்களையும், 'சஸ்பெண்ட்' செய்ய திருப்பூர் மற்றும் நீலகிரி எஸ்.பி., உத்தரவிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us