sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தொரவலுார் ஊராட்சியில் மகளிர் சபா சிறப்பு கூட்டம்

/

தொரவலுார் ஊராட்சியில் மகளிர் சபா சிறப்பு கூட்டம்

தொரவலுார் ஊராட்சியில் மகளிர் சபா சிறப்பு கூட்டம்

தொரவலுார் ஊராட்சியில் மகளிர் சபா சிறப்பு கூட்டம்


ADDED : மார் 11, 2025 04:28 AM

Google News

ADDED : மார் 11, 2025 04:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், : திருப்பூர் மாவட்டத்தில் முன்மாதிரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தொரவலுார் ஊராட்சியில் மகளிர் சபா கூட்டம் நடந்தது.

தமிழகத்தில் மகளிர் நேய கிராம ஊராட்சி கீழ், 37 மாவட்டங்களில் இருந்து, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 265 ஊராட்சிகளில் தொரவலுார் ஊராட்சி முன்மாதிரி கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அதன்ஒரு பகுதியாக, மகளிர் தினத்தையொட்டி மகளிர் சபா கூட்டம் தொரவலுாரில் நடந்தது. இதில், கிராமத்திலுள்ள பெண்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை கூறி, துாய்மை பாரதம் குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

தொடர்ந்து, தங்கள் கோரிக்கை குறித்து தெரிவித்தனர். துாய்மையாக வேலை செய்த துாய்மை காவலர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.

பெருமாநல்லுார் ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர் யசோதா தலைமையில் முகாம் நடந்தது. வக்கீல் மகாலட்சுமி மகளிருக்கு உள்ள சட்ட பாதுகாப்பு விதிகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.






      Dinamalar
      Follow us