/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீசத்ய சாய் சேவா சங்கம் அழைப்பு
/
ஸ்ரீசத்ய சாய் சேவா சங்கம் அழைப்பு
ADDED : ஆக 20, 2024 10:37 PM
திருப்பூர்:ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் விழா அடுத்தாண்டு (2025) நவ., மாதம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அகில உலக அளவில் மூன்று முக்கியமான அம்சங்களைப் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 'நித்ய நாராயண சேவை' எனப்படும் தினசரி குறைந்த பட்சம் ஒருவருக்கு உணவு வழங்குதல்; 'ஆசைக்கு ஒரு உச்ச வரம்பு' - - நேரம், உணவு, பணம், சக்தி ஆகியவற்றை வீணடிக்க கூடாது; 'பிரேம தரு' எனப்படும் மரம் நடும் நிகழ்ச்சி ஆகிய மூன்று அம்சங்கள் பின்பற்றப்படவுள்ளது.
இதுதவிர, திருப்பூர் மாவட்ட அளவில் இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டியும் நடத்தப்படுகிறது. இவற்றில் பங்கேற்க விரும்புவோர், திருப்பூர் மாவட்ட சத்திய சாய் சேவா அமைப்பினரை, 94425 70035 மற்றும் 82489 58831 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதன் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்

