/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ சுடலை மகாராஜா கோவில் பொங்கல் விழா 24ல் துவக்கம்
/
ஸ்ரீ சுடலை மகாராஜா கோவில் பொங்கல் விழா 24ல் துவக்கம்
ஸ்ரீ சுடலை மகாராஜா கோவில் பொங்கல் விழா 24ல் துவக்கம்
ஸ்ரீ சுடலை மகாராஜா கோவில் பொங்கல் விழா 24ல் துவக்கம்
ADDED : ஆக 04, 2024 11:29 PM

அனுப்பர்பாளையம்: திருப்பூர், பி.என்., ரோடு, அண்ணா நகர் தியாகி குமரன் காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ சுடலை மகாராஜா மற்றும் ராஜகாளி அம்மன், முத்தாரம்மன், பேச்சியம்மன், பிரம்ம சக்தி கோவில் 18ம் ஆண்டு பொங்கல் விழா வரும் 24ல் தொடங்கி 29ம் தேதி வரை நடக்கிறது.
வரும் 24ம் தேதி காலை 4:00 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. 27ம் தேதி காலை 7:00 மணிக்கு தீர்த்தக்குடம் எடுத்து வருதல், 12:00 மணிக்கு உச்சிகால பூஜை, தொடர்ந்து, கணியான் அழைப்பு, இரவு 8:00 மணிக்கு படைக்கலம் கொண்டு வருதல், அம்மன் அழைத்தல், இரவு 9:00 மணிக்கு சாமிகளுக்கு படையல் பூஜை மற்றும் அலங்கார பூஜை, இரவு 11:00 மணிக்கு மாசாண சுடலை ஈஸ்வரர் மயான வேட்டைக்கு செல்லுதல், ஸ்ரீ சுடலை மகாராஜா கொதிக்கும் சுடுநீரில் குளித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
28ம் தேதி காலை 6:00 மணிக்கு பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து கோவிலில் பொங்கல் வைத்தல், 12:00 மணிக்கு உச்சி பூஜை தொடர்ந்து வில்லுப்பாட்டு, இரவு 10:00 மணிக்கு கம்பம் கங்கையில் சேர்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.