/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீசெல்வ ராஜகணபதி கோவில் கும்பாபிேஷகம் சோளிபாளையம் கோலாகலம்
/
ஸ்ரீசெல்வ ராஜகணபதி கோவில் கும்பாபிேஷகம் சோளிபாளையம் கோலாகலம்
ஸ்ரீசெல்வ ராஜகணபதி கோவில் கும்பாபிேஷகம் சோளிபாளையம் கோலாகலம்
ஸ்ரீசெல்வ ராஜகணபதி கோவில் கும்பாபிேஷகம் சோளிபாளையம் கோலாகலம்
ADDED : ஆக 23, 2024 10:34 PM

திருப்பூர்:திருப்பூர், சோளிபாளையம், ஸ்ரீசெல்வ ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்பூர், சோளிபாளையத்தில், ஸ்ரீசெல்வ ராஜகணபதி கோவில், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, விஷ்ணு துர்க்கை, பாலகணபதி, பாலமுருகன், நவக்கிரஹம், குப்பாத்தாளம்மன், கன்னிமார், அரசமரத்து விநாயகர் சன்னதிகளுடன் அமைந்துள்ளது.புதிதாக கட்டி முடிக்கப்பட்ட இக்கோவிலின் கும்பாபிேஷக விழா கடந்த 20ம் தேதி, மங்கள இசை, விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. சர்வசித்தி விநாயகர் கோவிலில் இருந்து, ஏராளமான பக்தர்கள், முளைப்பாலிகை மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து வந்து வந்தனர். தொடர்ந்து அன்று மாலை முதல் கால யாக பூஜை நடந்தது.
கடந்த, 21ம் தேதி காலை, இரண்டாம் கால யாக பூஜை; உபசார வழிபாடு; சதுர்வேத பாராயணம் ஆகியனவும், அன்று மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தன.
நேற்று முன்தினம் (22ம் தேதி) அதிகாலை, 5:30 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது. நிறைவேள்வி பூஜைகளை தொடர்ந்து, யாகசாலையில் இருந்து புனித கலசங்கள் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, மூலவர் விமான கலசம் கும்பாபிேஷகம்; ஸ்ரீசெல்வ ராஜகணபதி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. தசதானம், தசதரிசனம், மகா அபிேஷகம், மகாதீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கும்பாபிேஷக ஸ்ர்வசாதக முன்னேற்பாடுகள் கருங்கல்பாளையம் சுந்தரேச சிவாச்சாரியார் தலைமையில் நடந்தது. சிவானந்த சிவம், சுரேந்திர சிவம், பிரகாஷ் குருக்கள் மற்றும் குழுவினர் சர்வசாதகம் செய்தனர்.கும்பாபிேஷக விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் மற்றும் சோளிபாளையம் ஊர்ப் பொதுமக்கள் செய்திருந்தனர்.கும்பாபிேஷகத்தைத் தொடர்ந்து மண்டலாபிேஷக பூஜை தினமும் நடைபெறுகிறது.
--
திருப்பூர், சோளிபாளையம், ஸ்ரீசெல்வ ராஜகணபதி கோவில் கும்பாபிேஷகம் கோலாகலமாக நடந்தது. கோபுர கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்படுகிறது.
கும்பாபிேஷகத்தைக் காணக் குவிந்த பக்தர்கள்.