/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீதங்கமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் :பெண்கள் தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம்
/
ஸ்ரீதங்கமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் :பெண்கள் தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம்
ஸ்ரீதங்கமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் :பெண்கள் தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம்
ஸ்ரீதங்கமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் :பெண்கள் தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம்
ADDED : ஜூன் 10, 2024 01:55 AM

அவிநாசி:அவிநாசி வட்டம், செம்பியநல்லுார் ஊராட்சிக்குட்பட்ட எஸ்.மேட்டுப்பாளையத்தில் ஸ்ரீ தங்க விநாயகர், ஸ்ரீ வள்ளி தெய்வானை தங்க முருகன், ஸ்ரீ தங்கமாரியம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் கோவில் உள்ளது.
வரும் 12ம் தேதி கும்பாபிேஷகம், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் விஜயகுமார சிவாச்சாரியார் தலைமையில் நடக்கிறது.
நேற்று அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.
இன்றும், நாளையும் யாக சாலை பூஜைகள் நடக்கின்றன. வரும் 12ம் தேதி ஸ்ரீ தங்க விநாயகர், ஸ்ரீ தங்க மாரியம்மன், ஸ்ரீ தங்க முருகன் உள்ளிட்ட பரிவார மூர்த்தி களின் கோபுர கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் மக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

