/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட ஹாக்கி அணியில் 'சென்சுரி' பள்ளி மாணவர்கள்
/
மாவட்ட ஹாக்கி அணியில் 'சென்சுரி' பள்ளி மாணவர்கள்
ADDED : ஆக 08, 2024 12:09 AM

திருப்பூர்: மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில், உடுமலை, நேதாஜி மைதானத்தில், மாவட்ட சப்-ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி நடந்தது. திருப்பூர் சென்சுரி பவுண்டேசன் பள்ளி அணியினர் பங்கேற்றனர்.
பிளஸ் 1 மாணவர்கள் மித்ரன், ரிஷிநாத், அருண்மைக்கேல், ஜெய்பிரணவ்; ஒன்பதாம் வகுப்பு மாணவர் ரகுபிரகாஷ் ஆகிய ஐந்து பேர் சிறப்பாக விளையாடியதால், மாவட்ட அணிக்கு தேர்வாகினர். ராணிப்பேட்டையில், ஆக., 15 முதல், 18 வரை நடக்கவுள்ள மாநில சப்-ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில், திருப்பூர் மாவட்ட அணி சார்பில் பங்கேற்க உள்ளனர். இவர்களைப் பள்ளி தாளாளர் சக்திதேவி, முதல்வர் ஹப்சிபாபால், ஹாக்கி பயிற்சியாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் பாராட்டினர்.