sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரேவதி கல்வி நிறுவனங்கள் நடத்திய 'வெற்றி நிச்சயம்'

/

ரேவதி கல்வி நிறுவனங்கள் நடத்திய 'வெற்றி நிச்சயம்'

ரேவதி கல்வி நிறுவனங்கள் நடத்திய 'வெற்றி நிச்சயம்'

ரேவதி கல்வி நிறுவனங்கள் நடத்திய 'வெற்றி நிச்சயம்'


ADDED : ஏப் 28, 2024 01:30 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 01:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி;அவிநாசி அருகே செயல்படும் ரேவதி அறக்கட்டளை மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில், 'வெற்றி நிச்சயம் - 2024' நிகழ்ச்சி ரேவதி நர்சிங் கல்லுாரி அரங்கில் நடந்தது.

'பிளஸ் 2 வகுப்புக்கு பின், என்ன, எங்கு, எப்படி படிக்கலாம்' என்பது குறித்தான, முப்பெரும் மருத்துவ கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிக்கு ரேவதி நிறுவனத் தலைமை நிர்வாக அலுவலர் நாகரத்தினம் வரவேற்றார். நோக்கம் குறித்து கூடுதல் நிர்வாக இயக்குனர் விஷ்ணுராகவ் பேசினார்.

திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கல்வி மேம்பாடு குறித்து சிறப்புரையாற்றினார். ரேவதி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி பங்கேற்றார். மருத்துவ கல்வி குறித்த கண்காட்சியை கல்வியாளர் டாக்டர் ஜெயப்பிரகாஷ் காந்தி திறந்து வைத்து பேசினார்.

கல்லுாரி நிர்வாக அலுவலர் சிவானந்த வல்லபன் நன்றி கூறினார். ரேவதி நர்சிங் கல்லுாரி மற்றும் கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2வில், முதல் மூன்று மதிப்பெண் எடுப்பவர்களுக்கு, 25 சதவீத கல்வி கட்டண சலுகையும், 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பவர்களுக்கு, 10 சதவீத கல்வி கட்டண சலுகையும் வழங்குகின்றனர்.






      Dinamalar
      Follow us