ADDED : ஆக 25, 2024 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:காங்கயம், வட்டமலை பகுதியில் சிலர், திருப்பூரில் இருந்து கொண்டு வந்து கஞ்சா விற்பனை செய்வது தெரிந்தது. இதுதொடர்பாக, தாராபுரம் மதுவிலக்கு போலீசார் கண்காணித்து வந்தனர்.
திருப்பூர் தேவராயம்பாளையத்தில் வசித்து வரும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சந்து மகாஜன், 27 என்பவர் கஞ்சா பொட்டலங்களை விற்க வந்தது தெரிந்தது. அவரை கைது செய்து, ஒரு கிலோ, 100 கிராம் பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.