sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வளர்ப்பு மகனை அடைத்து வைத்து கொடுமை :ரூ.10 கோடி ஆசையில் பெண்ணின் கொடூரம்

/

வளர்ப்பு மகனை அடைத்து வைத்து கொடுமை :ரூ.10 கோடி ஆசையில் பெண்ணின் கொடூரம்

வளர்ப்பு மகனை அடைத்து வைத்து கொடுமை :ரூ.10 கோடி ஆசையில் பெண்ணின் கொடூரம்

வளர்ப்பு மகனை அடைத்து வைத்து கொடுமை :ரூ.10 கோடி ஆசையில் பெண்ணின் கொடூரம்


ADDED : ஜூலை 10, 2024 12:12 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;நத்தக்காடையூரில், 10 கோடி ரூபாய் சொத்துக்காக, 15 வயது வளர்ப்பு மகனை கொடுமைப்படுத்திய பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொடுமைக்கு ஆளான சிறுவன் மீட்கப்பட்டார்.

காங்கயம், நத்தக்காடையூர், வசந்தம் நகரை சேர்ந்தவர் நாச்சியப்பன், 65. விவசாயி. இவருக்கு, ஏறத்தாழ 10 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து உள்ளது. இவர் மனைவி லட்சுமி, 62. தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால், கடந்த, 10 ஆண்டு முன் அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஒரு ஆண் குழந்தையை முறைப்படி தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.தற்போது, சிறுவனுக்கு 15 வயதாகிறது. இந்நிலையில், 2 ஆண்டு முன் நாச்சியப்பன் வாகன விபத்தில் இறந்து விட்டார். அவர் பெயரில் இருந்த சொத்துகள் மைனர் சிறுவனான வளர்ப்பு மகன் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது.

ஆனால், வளர்ப்பு மகனுக்கு சொத்து செல்வதை விரும்பாத லட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் சிறுவனை மன ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சிறுவனை பண்ணை வீட்டில் அடைத்து வைத்து, உணவு தராமல் கொடுமைப்படுத்தி, அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

இது குறித்து, எஸ்.பி., மற்றும் காங்கயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சென்ற போலீசார், சிறுவனை அங்கிருந்து மீட்டு, அரசு காப்பகத்தில் சேர்த்தனர். சிறுவனை துன்புறுத்திய வளர்ப்பு தாய் மற்றும் உறவினர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us