sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆயுதங்களுடன் துரத்தி தாக்கிய கும்பல் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

/

ஆயுதங்களுடன் துரத்தி தாக்கிய கும்பல் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

ஆயுதங்களுடன் துரத்தி தாக்கிய கும்பல் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

ஆயுதங்களுடன் துரத்தி தாக்கிய கும்பல் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்


ADDED : ஆக 20, 2024 02:11 AM

Google News

ADDED : ஆக 20, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலையில், பிரதான ரோட்டில், ஒருவரை கல் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒரு கும்பல் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலை பசுபதி வீதி, கச்சேரி வீதி பகுதியில், அரசு மருத்துவமனை, நகர கூட்டுறவு பண்டகசாலை மற்றும் வணிக நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் உள்ள பகுதியில், நேற்று காலை, 8:00 மணிக்கு, கத்தி, செங்கல், டியூப் லைட் உள்ளிட்டவற்றால், ஒருவரை, ஒரு கும்பல் துரத்திக்கொண்டிருந்தது.

இதனைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, அலறியடித்துக்கொண்டு ஓடினர். இது குறித்து உடுமலை போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்குச்சென்று விசாரணை நடத்தினர்.

இதில், யு.எஸ்.எஸ்., காலனியைச்சேர்ந்த திருமூர்த்தி, 30, என்பவரை, முன்விரோதம் காரணாக கும்பல் துரத்தி தாக்கியுள்ளது. இதில் காயமடைந்த திருமூர்த்தி, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து, உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, யு.எஸ்.எஸ்., காலனியைச்சேர்ந்த மாரிமுத்து, 22, மணிகண்டன், 30 ஆகிய இருவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

மேலும், இதில் தொடர்புடைய நந்தகுமார், 24, பிர்லா பிரசாந்த், 20 உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us