sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தேர்தல் பணிக்கான கையேடு வந்தாச்சு!

/

தேர்தல் பணிக்கான கையேடு வந்தாச்சு!

தேர்தல் பணிக்கான கையேடு வந்தாச்சு!

தேர்தல் பணிக்கான கையேடு வந்தாச்சு!


ADDED : மார் 24, 2024 01:55 AM

Google News

ADDED : மார் 24, 2024 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், ஓட்டுச்சாவடிகளில், தேர்தல் பணியாற்ற உள்ள, ஓட்டுச்சாவடி அலுவலர் மற்றும் ஓட்டுப்பதிவு அலுவலருக்கான கையேடு தருவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தொகுதிகளில், 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுப்பதிவு அலுவலர் பணியாற்ற உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளுக்கு, ஓட்டுச்சாவடி அலுவலர், ஓட்டுப்பதிவு அலுவலர் 1, 2 மற்றும் 3 என, நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, தேர்தல் பணி தொடர்பாக மூன்று கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முதல்கட்ட பயிற்சி இன்று அளிக்கப்பட உள்ள நிலையில், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய, கையேடு நேற்று வந்தடைந்தது.

தேர்தல் கமிஷன் விதிமுறைகளின்படி, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்ற தலைப்புகளில், விவரம் இடம்பெற்றுள்ளன. ஓட்டுப்பதிவு அலுவலர் பணி விவரமும் இடம்பெற்றுள்ளது. நேற்று, சட்டசபை தொகுதிகள் வாரியாக பிரித்து, கையேடுகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இன்றைய பயிற்சி முகாமின் போது, ஓட்டுச்சாவடி அலுவலருக்கு, இந்த கையேடுகள் வழங்கப்படும்; அதனை தொடர்ந்து பயிற்சி துவங்கும் என, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us