/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தல் பணிக்கான கையேடு வந்தாச்சு!
/
தேர்தல் பணிக்கான கையேடு வந்தாச்சு!
ADDED : மார் 25, 2024 12:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;லோக்சபா தொகுதிகளில், 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுப்பதிவு அலுவலர் பணியாற்ற உள்ளனர். மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளுக்கு, ஓட்டுச்சாவடி அலுவலர், ஓட்டுப்பதிவு அலுவலர் 1, 2 மற்றும் 3 என, நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய, கையேடு நேற்றுமுன்தினம் வந்தடைந்தது.
தேர்தல் கமிஷன் விதிமுறைகளின்படி, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்ற தலைப்புகளில், விபரம் இடம்பெற்றுள்ளன. ஓட்டுப்பதிவு அலுவலர் பணி விவரமும் இடம்பெற்றுள்ளது. சட்டசபை தொகுதிகள் வாரியாக பிரித்து, கையேடுகள் அனுப்பி வைக்கப்பட்டன.

