sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கொளுத்தி தள்ளுகிறது வெயில் :ஏர்கூலர் விற்பனை அதிகரிப்பு

/

கொளுத்தி தள்ளுகிறது வெயில் :ஏர்கூலர் விற்பனை அதிகரிப்பு

கொளுத்தி தள்ளுகிறது வெயில் :ஏர்கூலர் விற்பனை அதிகரிப்பு

கொளுத்தி தள்ளுகிறது வெயில் :ஏர்கூலர் விற்பனை அதிகரிப்பு


ADDED : ஏப் 28, 2024 12:09 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:'வெயிலின் தாக்கத்தால் நடப்பாண்டு ஏ.சி., விற்பனை, ஏர்கூலர் விற்பனை அதிகரிக்கும்,' என, விற்பனையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் குறைந்தபட்ச வெப்ப நிலை, 100 முதல், 103 பரான்ஹீட்டாக பதிவாகிறது. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், மதிய நேரத்தில் வெளியே தலைகட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஏ.சி., ஏர்கூலர் விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது.

திருப்பூரை சேர்ந்த ஏ.சி., விற்பனையாளர் விஜய் கூறியதாவது:

கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டு ஏ.சி., விற்பனை மெல்ல உயர்ந்து வருகிறது. 10 முதல், 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏர்கூலர் வாங்க வருவோர், 40 ஆயிரம் செலுத்தி குறைந்தபட்ச அளவிலான (ஒரு டன்) ஏ.சி., வாங்கி, தவணை செலுத்தி செலுத்துகின்றனர்.

வீட்டில், மின் விசிறி இருந்தாலும், கூட, 10 ஆயிரம் ரூபாய் விலையில், ஏர்கூலர் வாங்கி விடுகின்றனர். ஏ.சி.,யை விட, ஏர்கூலர் விற்பனை அதிகமாக உள்ளது. இதனால், வழக்கத்தை விட கூடுதலாக ஏர்கூலர்களை கொள்முதல் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us