ADDED : ஜூலை 10, 2024 11:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான மையத் தடுப்பு விளக்குகள் எரிவது கிடையாது.
மின்மினி பூச்சிகள் போல் அவ்வப்போது எரிவதும், அணைவதுமாக உள்ளன. இரவு நேரங்களில் பெரும்பாலும் நகரப் பகுதி இருள் சூழ்ந்தே காணப்படுகிறது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் நெடுஞ்சாலை, இருளின் பிடியில் இருப்பதால், வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. தெருவிளக்குகளை முறையாக பராமரித்து எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.