sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நத்தம் நிலத்துக்கு 'ஆன்லைன்' சேவை ஆக., மாதம் முதல் அமலுக்கு வருகிறது

/

நத்தம் நிலத்துக்கு 'ஆன்லைன்' சேவை ஆக., மாதம் முதல் அமலுக்கு வருகிறது

நத்தம் நிலத்துக்கு 'ஆன்லைன்' சேவை ஆக., மாதம் முதல் அமலுக்கு வருகிறது

நத்தம் நிலத்துக்கு 'ஆன்லைன்' சேவை ஆக., மாதம் முதல் அமலுக்கு வருகிறது


ADDED : ஜூலை 30, 2024 01:33 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, ஒன்பது தாலுகாவிலும், ஆக., மாதத்தில் இருந்து, நத்தம் நிலத்துக்கான 'ஆன்லைன்' சேவை கிடைக்குமென, வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு, ரயத்துவாரி நிலத்துக்கான விவரங்களை, கடந்த பல ஆண்டுகளாக கம்ப்யூட்டர் வாயிலாக பராமரிக்கிறது. ஆன்லைன் சேவையும் கிடைத்து வருகிறது. நத்தம் நிலம் தொடர்பான விவரம், புல வரைபடம் அனைத்தும், பதிவேடுகளாக மட்டுமே பராமரிக்கப்பட்டது.

ஆன்லைன் சேவைக்கு உட்படுத்தும் வகையில், 2017ம் ஆண்டில், நத்தம் தொடர்பான விவரம் அனைத்தும், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பலகட்ட சரிபார்ப்புக்கு பின், ஆன்லைன் சேவை கொடுக்க தயாராகி வருகின்றனர்.

முதல் கட்டமாக, திருப்பூர் வடக்கு மற்றும் ஊத்துக்குளி தாலுகாவில், இந்த சேவை துவங்கப்பட்டது. அடுத்த கட்டமாக, திருப்பூர் தெற்கு, அவிநாசி, ஊத்துக்குளி, பல்லடம் தாலுகா விவரம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

உடுமலை உள்ளிட்ட பிற தாலுகா விவரம், மாவட்ட தேசிய தகவலியல் மையம் மூலமாக, மாநில தகவல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் சரிபார்த்த பிறகு, நத்தம் ஆன்லைன் சேவை அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள், தங்களது நத்தம் சொத்துக்கான சிட்டா, நகலை பார்வையிட்டு, சரிபார்த்துக் கொள்ளலாம். தேவையற்ற பதிவுகள் இருந்தால், ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பித்து முறைப்படுத்திக்கொள்ளலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நில அளவைப்பிரிவு உதவி இயக்குனர் சிவக்குமார் கூறுகையில், ''ஒன்பது தாலுகாவில் உள்ள, நத்தம் நிலத்துக்கான ஆன்லைன் சேவை, ஆக., மாதத்தில் இருந்து அமலுக்கு வரும். 'eservices' மூலமாக, மொபைல் போன் வாயிலாகவே, மாவட்டம், தாலுகா, கிராமத்தை தேர்வு செய்து, தங்களது புல எண்ணில் உள்ள விவரத்தை பார்வையிடலாம். பதிவிறக்கம் செய்யலாம்.

விரைவில், நிலத்துக்கான புல வரைபடமும் ஆன்லைன் சேவையாக கிடைக்கும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us