/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மனதின் குரல்' நிகழ்ச்சி ஒளிபரப்பிய பா.ஜ., வினர்
/
'மனதின் குரல்' நிகழ்ச்சி ஒளிபரப்பிய பா.ஜ., வினர்
ADDED : ஜூன் 30, 2024 09:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;பிரதமர் மோடியின் 'மனதின் குரல்' நிகழ்ச்சியை பொதுமக்கள், கட்சியினர் பார்க்கும் வகையில் பா.ஜ., வினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பின் நடக்கும் முதல் 'மன் கீ பாத் நிகழ்ச்சி (மனதின் குரல்) நேற்று நடந்தது. இதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் பா.ஜ., வினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், மாவட்ட தலைமை அலுவலகம் உட்பட, 19 மண்டலங்களில், ஆயிரத்து, 33 பூத்களில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.