sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தீவன பற்றாக்குறை நீங்கியது

/

தீவன பற்றாக்குறை நீங்கியது

தீவன பற்றாக்குறை நீங்கியது

தீவன பற்றாக்குறை நீங்கியது


ADDED : ஆக 25, 2024 12:29 AM

Google News

ADDED : ஆக 25, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்:பயிர் சாகுபடியுடன் பெரும்பாலான விவசாயிகள் கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இந்த ஆண்டு கோடை மழை குறைவாகவே பெய்தது.

இதனால், தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டு கால்நடை விவசாயிகள் தவித்து வந்தனர். வைக்கோல், அடர் தீவனம், கழிவுப்பஞ்சு போன்றவற்றை விலைக்கு வாங்கி கால்நடைகளை காப்பாற்றி வந்தனர். பால் உற்பத்தியும் குறைந்து விவசாயிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஆடி மாதம் பெய்த தென் மேற்கு பருவ மழை வரப்பிரசாதமாக அமைந்தது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. மழையால் மேய்ச்சல் நிலங்களில் கோரை, கொழுக்கட்டை, அருகு போன்ற புல் வகைகள் நன்கு வளர்ச்சி அடைய துவங்கி உள்ளது.

இதனை பயன்படுத்தி கம்பு சோளம் மற்றும் மசால் வகை பயிர்களை சாகுபடி செய்ய துவங்கியுள்ளனர். தீவன பற்றாக்குறை நீங்கி உள்ளதால் கால்நடை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us