sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆடிப்பட்டத்துக்கு அடியுரம் இடும் பணி 

/

ஆடிப்பட்டத்துக்கு அடியுரம் இடும் பணி 

ஆடிப்பட்டத்துக்கு அடியுரம் இடும் பணி 

ஆடிப்பட்டத்துக்கு அடியுரம் இடும் பணி 


ADDED : ஜூலை 15, 2024 02:44 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;ஆடிப்பட்ட சீசன் சாகுபடிக்காக, மண் வளத்தை மேம்படுத்த, அடியுரம் இட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உடுமலை சுற்றுப்பகுதியில், பி.ஏ.பி., பாசன திட்டம் மற்றும் கிணற்றுப்பாசனத்துக்கு, பல்வேறு சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

விளைநிலங்களில், ஒரே வகையான பயிர் சாகுபடியை தொடர்ந்து மேற்கொள்வதால், மண் வளம் குறைகிறது. ஓராண்டு இடைவெளிக்கு பிறகு, மேற்கொள்ளப்படும் சாகுபடியில், மண் வளம் குறைவால், மகசூல் குறைவு உட்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.

இதற்கு தீர்வாக, சாகுபடிக்கு முன்பு, அடியுரம் இட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். வரும் ஆக., மாதத்தில், பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இப்பாசன பகுதியில், மக்காச்சோளம் அதிகளவு சாகுபடி செய்யப்படுவது வழக்கம். அதே போல், ஆடிப்பட்டத்திலும், பல்வேறு தானிய சாகுபடிக்காக விதைப்பு செய்வார்கள். இதில், அதிக மகசூல் பெற, தற்போதே அடியுரம் இட்டு, உழவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

முன்பு, மாட்டுச்சாணம் உட்பட தொழு உரங்களை விளைநிலத்தில் வீசி உழவு செய்வது வழக்கம். தற்போது, கறிக்கோழி பண்ணைகளில் கிடைக்கும், கோழி எருவையும், அடியுரமாக அதிகளவு பயன்படுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us