sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நேர்மையுடன் வாழ திருக்குறளே துணை!

/

நேர்மையுடன் வாழ திருக்குறளே துணை!

நேர்மையுடன் வாழ திருக்குறளே துணை!

நேர்மையுடன் வாழ திருக்குறளே துணை!


ADDED : மே 26, 2024 12:29 AM

Google News

ADDED : மே 26, 2024 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமுருகன்பூண்டியில் உள்ள ஸ்ரீ விவேகானந்த சேவாலயத்தில் திருப்பூர் அறம் அறக்கட்டளை சார்பில் திருவள்ளுவர் ஜெயந்தி விழா நடைபெற்றது. சேவாலய தலைமை நிர்வாகி செந்தில்நாதன் வரவேற்றார். அறம் அறக்கட்டளை தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். கவிஞர் பக்தவச்சலம் முன்னிலை வகித்தார்.

எழுத்தாளர் முத்துபாரதி பேசியதாவது:

இன்றைய சூழலில் அறவாழ்க்கை என்பது குறித்தான போதிய விழிப்புணர்வு இல்லை. தான் இன்பமாக வாழ எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்ற நிலையில் தான் உலகின் அனைத்து குற்றங்களும் நிகழ்கின்றன. பிறரை ஏமாற்றி, பொய் சொல்லி, திருடி, லஞ்சம் வாங்கி ஊழல் செய்து கணக்கில்லாமல் சம்பாதித்து அதன் மூலம் இன்பமாக வாழ்ந்தாலும் மன நிம்மதி என்பதை நிச்சயம் இருக்காது.

நேர்மையான வழியில் உண்மையாக வாழ அனைவரும் திருவள்ளுவர் வழங்கிய திருக்குறளை வாழ்க்கை துணையாக கொள்ள வேண்டும், என்றார். முன்னதாக திருக்குறள் ரங்கராஜன், சன்மார்க்க நெறியாளர் அஜந்தா நாராயணசாமி பேசினர்.






      Dinamalar
      Follow us