sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு திருப்பூர் சாய ஆலைத்துறையினர் எதிர்பார்ப்பு

/

தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு திருப்பூர் சாய ஆலைத்துறையினர் எதிர்பார்ப்பு

தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு திருப்பூர் சாய ஆலைத்துறையினர் எதிர்பார்ப்பு

தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு திருப்பூர் சாய ஆலைத்துறையினர் எதிர்பார்ப்பு


ADDED : மார் 05, 2025 03:39 AM

Google News

ADDED : மார் 05, 2025 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:தமிழக அரசு, பட்ஜெட் வாயிலாக, திருப்பூர் சாயத்தொழில் பாதுகாப்புக்கான அறிவிப்புகளை வெளியிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் பகுதிகளில், 18 பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உட்பட்ட, 300 சாய ஆலைகளும், 60 தனியார் சுத்திகரிப்பு சாய ஆலைகளும் இயங்கி வருகின்றன. இவற்றில், 90 சதவீதம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களாக உள்ளன.

சாய ஆலைகளில், நவீன இயந்திரங்கள் நிறுவ, ஐந்து கோடி ரூபாய் வரை முதலீடு தேவைப்படுகிறது; தற்போது, 18 சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உட்பட்ட, 300 சாய ஆலைகள் மட்டும், 2,000 கோடி ரூபாய்க்கு அதிகமாக முதலீடு செய்துள்ளது. நேரடியாகவும், மறைமுகமாகவும், ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

சாய ஆலைகள் கடும் நெருக்கடியில் இருப்பதால், சாயத்தொழிலை பாதுகாக்க, மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர சாய தொழிற்சாலைகள் தொடர்ந்து செயல்பட, உரிய உதவிகள் செய்ய வேண்டும். இயந்திரங்கள் நிறுவ, 25 சதவீதம் முதலீட்டு மானியம் வழங்க வேண்டும். மாவட்ட தொழில் மையங்கள் மூலம் முதலீட்டு மானியம் பெற, முதலீட்டு உச்சவரம்பை ஒரு கோடி ரூபாய் என்பதை, 10 கோடியாக உயர்த்த வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தர சாய தொழிற்சாலைகளின், தொழில் அபிவிருத்தி கடனுக்கு, குறைந்தது, 3 சதவீதம் வட்டி மானியம் வழங்க வேண்டும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர சாய தொழிற்சாலைகள் மீது விதிக்கப்படும், சொத்து வரி மற்றும் தொழில் வரி குறைக்கப்பட வேண்டும். சோலார் மின் உற்பத்தி திட்டத்தை கட்டமைக்க, முதலீட்டு மானியம் வழங்க வேண்டுமென, சாய ஆலைகள் வலியுறுத்தி வருகின்றன.

படம் வைக்கவும்

அறிவிப்பு... எதிர்பார்ப்பு!'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வருதால், சாய ஆலைகளின் உற்பத்தி செலவு, மற்ற நிறுவனங்களை காட்டிலும், 15 சதவீதம் அதிகமாக உள்ளது. திருப்பூரில் உள்ள சாய ஆலைகளால், போட்டிகளை சமாளித்து, 'ஜாப் ஒர்க்' ஆர்டர் பெறுவது சிரமமாக இருக்கிறது. எனவே, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவில் இயங்கும் திருப்பூர் சாய ஆலைகளுக்கு, தமிழகஅரசு, பட்ஜெட் வாயிலாக தொழில் பாதுகாப்புக்கான அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.- காந்திராஜன்திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர்








      Dinamalar
      Follow us