/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வனத்துக்குள் திருப்பூர் ; நாதம்பாளையத்தில் நாட்டு வேம்பு நடவு
/
வனத்துக்குள் திருப்பூர் ; நாதம்பாளையத்தில் நாட்டு வேம்பு நடவு
வனத்துக்குள் திருப்பூர் ; நாதம்பாளையத்தில் நாட்டு வேம்பு நடவு
வனத்துக்குள் திருப்பூர் ; நாதம்பாளையத்தில் நாட்டு வேம்பு நடவு
ADDED : ஆக 26, 2024 11:31 PM

திருப்பூர்:'வெற்றி' அமைப்பின், வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், 19 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஏறத்தாழ, 18 லட்சம் மரக்கன்றுகள், இளம் மரமாக வளர்ந்துள்ளன. நடப்பு ஆண்டில், மூன்று லட்சம் மரக்கன்றுகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, 1.27 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன.
அவிநாசி அருகே நாதம்பாளையம் கிராமத்திலுள்ள மேற்கு தோட்டத்தில், 500 நாட்டு வேம்பு மரக்கன்றுகள் நடப்பட்டன. தோட்ட உரிமையாளர் வெங்கடாசலம், அவரது மனைவி சுகன்யா மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தனர்.
'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தின் வாயிலாக, மரக்கன்றுகள் இலவசமாக நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
---
நாதம்பாளையம் கிராமத்தில் 500 நாட்டு வேம்பு மரக்கன்றுகள் நடப்பட்டன.