/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெந்து தணியாத திருப்பூர்! 5ம் தேதி வரை வெயில் சுட்டெரிக்கும்...
/
வெந்து தணியாத திருப்பூர்! 5ம் தேதி வரை வெயில் சுட்டெரிக்கும்...
வெந்து தணியாத திருப்பூர்! 5ம் தேதி வரை வெயில் சுட்டெரிக்கும்...
வெந்து தணியாத திருப்பூர்! 5ம் தேதி வரை வெயில் சுட்டெரிக்கும்...
ADDED : மே 02, 2024 07:14 AM

திருப்பூர்: 'திருப்பூர் மாவட்டத்தில் இந்த வாரமும் வெயில் அதிகளவில் இருக்கும்' என, வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
கோடை வெயிலின் உக்கிரம் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் நிலையில், மாநிலத்தின் பல மாவட்டங்களில், வரலாறு காணாத வெயில் நிலவுகிறது. 'குளு, குளு' காலநிலை நிலவும் ஊட்டியில், 73 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வெப்பநிலை அதிகரித்திருக்கிறது என்ற தகவல் வெளியானது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம், கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வாராந்திர வானிலை அறிக்கையில், ''திருப்பூர் மாவட்டத்தில், வரும், 5ம் தேதி வரை, அதிகபட்ச வெப்பநிலை, 41 முதல், 43 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். (அதாவது, 105.8 டிகிரி பாரன்ஹீட் முதல், 109.4 டிகிரி பாரன்ஹீட்) என, கூறப்பட்டுள்ளது. கடந்த வாரமும், இதே அளவு வெப்பநிலை தான் நிலவியது.
திருப்பூரில், குறைந்தபட்ச வெப்பநிலை, 30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். காலை நேர காற்றின் ஈரப்பதம், 60 முதல், 70 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம், 20 முதல், 30 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புள்ளது என, கூறப்பட்டுள்ளது. 'மணிக்கு, 12 முதல், 18 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்' எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மதிய நேரங்களில், 12:00 மணி முதல், 3:00 மணிவரை அதிக வெயில் எதிர்பார்க்கப்படுவதால், இயன்றவரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். கால்நடைகளை மாலை, 4:00 மணிக்கு மேல் மேய்ச்சலுக்கு விடுவது நல்லது.
இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வரும், 5ம் தேதி வரை, அதிகபட்ச வெப்பநிலை, 41 முதல், 43 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். (அதாவது, 105.8 டிகிரி பாரன்ஹீட் முதல், 109.4 டிகிரி பாரன்ஹீட்) என, கூறப்பட்டுள்ளது

