ADDED : செப் 12, 2024 08:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லாமல், பஸ்கள் ரோட்டில் நின்று செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள மடத்துக்குளத்தில், பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. பல்வேறு நகரங்களிலிருந்து மடத்துக்குளம் வழியாக, தினமும் நுாற்றுக்கணக்கான வெளியூர், டவுன் பஸ்கள் செல்கின்றன.
ஆனால், டவுன்பஸ்கள் தவிர வெளியூர் பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லாமல், வெளியே ரோட்டிலேயே நின்று பயணியரை ஏற்றி, இறக்கிச்செல்கின்றன. இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்ல, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.