/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் போக்குவரத்து நெரிசல்
/
பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் போக்குவரத்து நெரிசல்
ADDED : செப் 17, 2024 10:16 PM
உடுமலை : உடுமலை அருகே கொமரலிங்கத்தில், பஸ் ஸ்டாண்ட் இல்லாததால், குறுகிய பஸ் ஸ்டாப்பில் பஸ்கள் நிறுத்தப்படுவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலையிலுள்ள உடுமலை - பழநிக்கு, மடத்துக்குளம், கொழுமம் என, இரண்டு வழித்தடங்கள் உள்ளன. இதில், கொழுமம் தடத்தில், கொமரலிங்கம் அப்பகுதியிலுள்ள பல்வேறு கிராமங்களின் முக்கிய சந்திப்பாக உள்ளது.
இந்த தடம் அவசர காலங்களில் மாற்று வழித்தடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரோட்டில் போக்குவரத்து அதிக அளவில் இருந்து வருகிறது. ஆனால், கொமரலிங்கத்தில் பஸ் நிறுத்தம் மட்டுமே உள்ளதால், காலை, மாலை நேரங்களில் பஸ்கள் நிற்க இடமின்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
எனவே, கொமரலிங்கத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்லும் வகையில், பேரூராட்சி நிர்வாகத்தினர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.