/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சி.என்.ஜி., பஸ்கள் அதிகரிக்க போக்குவரத்து கழகம் திட்டம்
/
சி.என்.ஜி., பஸ்கள் அதிகரிக்க போக்குவரத்து கழகம் திட்டம்
சி.என்.ஜி., பஸ்கள் அதிகரிக்க போக்குவரத்து கழகம் திட்டம்
சி.என்.ஜி., பஸ்கள் அதிகரிக்க போக்குவரத்து கழகம் திட்டம்
ADDED : பிப் 22, 2025 07:03 AM
திருப்பூர்; சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், சி.என்.ஜி., எனப்படும் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பஸ்களை தமிழக அரசு கடந்தாண்டு நவ., முதல் விரைவு பஸ்களாக இயக்கி வருகிறது. சென்னையில் இருந்து திருச்சி மற்றும் சேலத்துக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
பி.எஸ்., 4 பஸ்களை ஒப்பிடும் போது, சி.என்.ஜி., பஸ்களின் பராமரிப்பு, இயக்க செலவு, குறிப்பாக எரிபொருள் செலவு குறைந்துள்ளது.
சி.என்.ஜி., பஸ்களில் ஒரு முறை எரிவாயு நிரப்பினால், 600 கி.மீ., துாரம் வரை பயணிக்க முடிகிறது. ஒரு கி.மீ.,க்கு 3 முதல் 4 ரூபாய் வரை மிச்சமாகியுள்ளது. ஒரு பஸ்சுக்கு ஒரு மாதத்துக்கு, 75 ஆயிரம் ரூபாய் வரை மிச்சமாவதால், சி.என்.ஜி., பஸ்கள் எண்ணிக்கையை அதிகரிக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, அரசுக்கு பரிந்துரைகள் வழங்கப்பட்ட நிலையில், எந்தெந்த வழித்தடங்களில் சி.என்.ஜி., பஸ்களை இயக்கத்துக்கு கொண்டு வரலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அரசு போக்குவரத்து கழக உயரதிகாரிகள் கூறுகையில், ''மாநிலம் முழுதும் தற்போது, 20 வரை உள்ள சி.என்.ஜி., பஸ் எண்ணிக்கை, 40 - 50 ஆக உயர்த்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்துக்கும் சி.என்.ஜி., பஸ்கள் கொண்டு வரப்பட உள்ளது.
அதற்காக, எந்தெந்த வழித்தடத்தில் டீசல் செலவு அதிகம் ஏற்படுகிறது என்பதை கண்காணித்து, அந்த வழித்தடத்தில் டீசல் பஸ்சுக்கு மாற்றாக சி.என்.ஜி., பஸ் இயக்குவது குறித்து முடிவெடுக்கப்படும்.
சி.என்.ஜி., பஸ் வழித்தடம் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வரு கிறது,' என்றனர்.

