sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மறுநடவு செய்யாமல் மரணிக்கும் மரங்கள்! நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்

/

மறுநடவு செய்யாமல் மரணிக்கும் மரங்கள்! நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்

மறுநடவு செய்யாமல் மரணிக்கும் மரங்கள்! நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்

மறுநடவு செய்யாமல் மரணிக்கும் மரங்கள்! நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்


ADDED : செப் 04, 2024 01:39 AM

Google News

ADDED : செப் 04, 2024 01:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:உடுமலை பகுதியில், ரோடு விரிவாக்கத்துக்காக அகற்றப்படும் மரங்களை மறுநடவு செய்யாமலும், புதிதாக மரக்கன்றுகள் நடவு செய்யவும், நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

உடுமலை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட முக்கிய ரோடுகளில், சந்திப்பு விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அப்பணிகளுக்காக நீண்ட காலமாக அப்பகுதியில் செழித்து வளர்ந்திருந்த மரங்களை அகற்றுகின்றனர். சுமார், 30 ஆண்டுக்கும் மேலான வயதுடைய மரங்களை வேரோடு அகற்றி மறுநடவு செய்ய வாய்ப்புள்ளது.

உதாரணமாக, உடுமலை நகரில், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளின் போது, அகற்றப்பட்ட மரங்கள் மறுநடவு செய்யப்பட்டது. ஆனால், இந்த நடைமுறையை மாநில நெடுஞ்சாலைத்துறையினர் பின்பற்றுவதில்லை.

உதாரணமாக, உடுமலை - திருமூர்த்திமலை ரோட்டில், போடிபட்டியில் இருந்து ரோட்டின் இருபுறங்களிலும், மரங்கள் அகற்றப்படுவது தொடர்கதையாக உள்ளது. வாளவாடி சந்திப்பு பகுதியில், மரங்கள் அகற்றப்பட்டு, அப்பகுதியே வெறுமையாய் காட்சியளிக்கிறது.

தற்போது, பள்ளபாளையம் செங்குளம் வளைவு பகுதியில் ரோடு விரிவாக்கப்பணிகளுக்காக மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டுள்ளது. இதே போல், மானுப்பட்டி பகுதியிலும், மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

மரங்களை வேரோடு சாய்த்து, சில நாட்களுக்குள், துண்டு, துண்டாக வெட்டி அப்புறப்படுத்தி விடுகின்றனர். இதனால், உடுமலை பகுதி மக்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது.

இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: நீண்ட காலமாக நிழல் கொடுத்த மரங்களை மனசாட்சி இல்லாமல் அகற்றி வருகின்றனர். ரோடு சந்திப்பு விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படும் இடத்திலேயே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது.

எளிதாக மரங்களை மறுநடவு செய்யலாம். இது குறித்து பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. புதிதாகவும் மரக்கன்றுகள் நடுவதில்லை.

ரோடு சந்திப்பு விரிவாக்க பணிகளால், மர விற்பனையாளர்களே அதிக பயன்பெற்று வருகின்றனர். இது குறித்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமூர்த்திமலை ரோட்டில் புதிதாக மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us