/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உச்சிஷ்ட விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
/
உச்சிஷ்ட விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஆக 20, 2024 11:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி:சேவூர் அருகே ஸ்ரீ சங்கிலி கருப்பராயன், சங்கிலி முனீஸ்வரன் உள்ளிட்ட பரிவார மூர்த்தி கோவிலில் உச்சிஷ்ட விநாயகர் விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சேவூர் அருகே பாலியக்காடு (கந்தப்ப கவுண்டன்புதுார்) பகுதியில் எழுந்தருளியுள்ள, 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ சங்கிலி கருப்பராயன் கோவில் உள்ளது. இக்கோவிலில், உச்சிஷ்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரண்டு கால யாக பூஜைகளை தொடர்ந்து, கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.