sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருப்பூர் வழித்தடத்தில் கூடுதல் பஸ் உடுமலை பயணியர் எதிர்பார்ப்பு

/

திருப்பூர் வழித்தடத்தில் கூடுதல் பஸ் உடுமலை பயணியர் எதிர்பார்ப்பு

திருப்பூர் வழித்தடத்தில் கூடுதல் பஸ் உடுமலை பயணியர் எதிர்பார்ப்பு

திருப்பூர் வழித்தடத்தில் கூடுதல் பஸ் உடுமலை பயணியர் எதிர்பார்ப்பு


ADDED : மார் 02, 2025 11:16 PM

Google News

ADDED : மார் 02, 2025 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை ;திருப்பூர் வழித்தடத்தில் போதுமான பஸ்கள் இயக்கப்படாததால், உடுமலை பகுதியை சேர்ந்த பயணியர் சிரமப்பட்டு வருகின்றனர்.

உடுமலை - திருப்பூர் வழித்தடத்தில், குடிமங்கலம், பல்லடம் நகரம் மற்றும் 50க்கும் அதிகமான கிராமங்கள் அமைந்துள்ளன.

பின்னலாடை, நுாற்பாலை உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு, கிராமங்களில் இருந்து நாள்தோறும், நுாற்றுக்கணக்கான மக்கள் திருப்பூர், பல்லடத்துக்கு பயணிக்கின்றனர். இவ்வழித்தடத்தில், பல்லடம் வரையுள்ள கிராமங்களுக்கு டவுன் பஸ் வசதியும் குறைவாகவே உள்ளது.

இடைபட்ட பகுதியிலுள்ள, அரசுப்பள்ளிகளுக்கு செல்லும், மாணவ, மாணவியரும், திருப்பூர் பஸ்களிலேயே பயணிக்க வேண்டியுள்ளது.

மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு சார்ந்த பணிகளுக்கு, பொதுமக்களும், அலுவலர்களும் திருப்பூருக்கு செல்கின்றனர்.

இவ்வாறு, தொழில், கல்வி, நிர்வாக முக்கியத்துவம் வாய்ந்த வழித்தடமாக இருப்பதால், உடுமலை-திருப்பூர் ரோடு மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், தேவையான அளவு பஸ்கள் இயக்கப்படவில்லை.

தொடர் கோரிக்கை அடிப்படையில், உடுமலையில் இருந்து, 'பாயின்ட் டூ பாயின்ட்' பஸ்கள் திருப்பூருக்கு இயக்கப்பட்டன. பஸ் ஸ்டாண்ட், குடிமங்கலம், ஜல்லிபட்டி, பல்லடம் ஆகிய இடங்களில், மட்டும் இப்பஸ்கள் நிறுத்தப்படும்.

இதனால், திருப்பூர் செல்பவர்கள் பயன்பெற்றாலும், வழித்தட கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு பலன் கிடைக்கவில்லை.

பயணியர் கூறுகையில், 'காலை, மாலை நேரங்களில், திருப்பூருக்கு போதிய பஸ் வசதி இல்லாததால், மிகுந்த சிரமப்படுகிறோம். குறிப்பாக, மாணவர்கள், தொழிலாளர்கள் நாள்தோறும் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கின்றனர்.

போக்குவரத்து கழக அதிகாரிகள், வழித்தடத்தில் பயணிகள் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை சேகரித்து, அதன் அடிப்படையில், கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது வழித்தடத்தில், கூடுதல் டவுன் பஸ்களை இயக்க வேண்டும். இரவு நேர பஸ் சேவையும் இவ்வழித்தடத்தில் தேவையாக உள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us