sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விரிவுபடுத்தப்படாத வாய்க்கால் பாலம்

/

விரிவுபடுத்தப்படாத வாய்க்கால் பாலம்

விரிவுபடுத்தப்படாத வாய்க்கால் பாலம்

விரிவுபடுத்தப்படாத வாய்க்கால் பாலம்


ADDED : ஆக 03, 2024 05:44 AM

Google News

ADDED : ஆக 03, 2024 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை அருகே பள்ளபாளையம் கிராமத்தில், பி.ஏ.பி., மற்றும் ஏழு குள பாசனத்திட்டத்தில், ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக விவசாய சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக, கரும்பு அதிகளவு இப்பகுதியில் பயிரிடப்பட்டு, வெல்லம் தயாரித்து, விவசாயிகள் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். விளைநிலங்களிலிருந்து பி.ஏ.பி., உடுமலை வாய்க்காலை கடந்து திருமூர்த்திமலை ரோடு வழியாக தங்கள் வாகனங்களில், விளைபொருட்களை விவசாயிகள் எடுத்து வருகின்றனர். வாய்க்காலை கடக்க, பி.ஏ.பி., உடுமலை கால்வாயில், 6.8 வது கி.மீ., ல் 1965ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது.

இந்த பாலம் போதிய பராமரிப்பு இல்லாமல், வலுவிழந்து வருகிறது.இதனால், பாலத்தின் வழியே விளைபொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் செல்ல முடியாத அவல நிலை உள்ளது. விவசாயிகள் பல கி.மீ., துாரம் சுற்றி, விளைபொருட்களை எடுத்துச்சென்று வருகின்றனர். பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படாததால், விவசாயிகள் அதிருப்தியில், உள்ளனர்.






      Dinamalar
      Follow us