sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வாகன தணிக்கை: ரூ.4.87 லட்சம் பறிமுதல்

/

வாகன தணிக்கை: ரூ.4.87 லட்சம் பறிமுதல்

வாகன தணிக்கை: ரூ.4.87 லட்சம் பறிமுதல்

வாகன தணிக்கை: ரூ.4.87 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 21, 2024 11:42 AM

Google News

ADDED : மார் 21, 2024 11:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூரில் பல இடங்களில் நடந்த வாகன தணிக்கையில், ரூ.4.87 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

லோக்சபா தேர்தலையொட்டி பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் போன்றவை வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் திருப்பூர் தெற்கு தொகுதிக்குள் சுழற்சி முறையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வகையில், திருப்பூர் ராக்கியாபாளையம் - கணபதிபாளையம் ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரமேஷ் தலைமையில் வாகன தணிக்கை செய்தனர். அவ்வழியாக காரில் வந்த முத்தணம்பாளையத்தை சேர்ந்த சரவணன், 35 என்பவர் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த, ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

n திருப்பூர், தாராபுரம் ரோடு, கருப்பராயன் கோவில் அருகே, மணிவேல் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அவ்வழியாக காரில் வந்த அவிநாசியை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவரிடம் இருந்து, ஒரு லட்சத்து, 99 ஆயிரத்து, 600 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

n திருப்பூர், காலேஜ் ரோடு, அணைப்பாளையத்தில், பக்ருதீன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் வாகன தணிக்கை செய்தனர். அவ்வழியாக காரில் வந்த, முருகம்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரிடம் இருந்து, ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

n ஈரோடு தொகுதிக்கு உட்பட்ட, வெள்ளகோவில், மயில்ரங்கத்தில் சதீஷ்குமார் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் வாகன தணிக்கை செய்தனர். அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். உரிய ஆவணங்களின்றி, 88 ஆயிரத்து, 100 ரூபாய் இருந்தது. சேலம், தாரமங்கலத்தை சேர்ந்த ஆட்டு வியாபாரிகள், மூலனுார், கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு ஆடு வாங்க கொண்டு செல்லப்பட்டது தெரிந்தது. ஐயப்பன் என்பவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us