sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வெற்றியை வசமாக்கிய 'வித்ய விகாசினி' பள்ளி அணி

/

வெற்றியை வசமாக்கிய 'வித்ய விகாசினி' பள்ளி அணி

வெற்றியை வசமாக்கிய 'வித்ய விகாசினி' பள்ளி அணி

வெற்றியை வசமாக்கிய 'வித்ய விகாசினி' பள்ளி அணி


ADDED : ஜூலை 28, 2024 12:30 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:பள்ளி அணிகளுக்கான மாவட்ட வாலிபால் போட்டியில், மாணவியர் இருபிரிவிலும் வித்ய விகாசினி பள்ளி அணி வெற்றி பெற்று அசத்தியது.

திருப்பூர், ஜெய் நகர், வித்ய விகாசினி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட வாலிபால் போட்டி நடந்தது. மாணவர் ஜூனியர் பிரிவில், 13, பொது பிரிவில், 12 அணிகள் பங்கேற்றன. மாணவியர் ஜூனியர் பிரிவில் பத்து, பொது பிரிவில் எட்டு என மொத்தம், 33 அணிகள் பங்கேற்று விளையாடின.

மாணவியர் ஜூனியர் பிரிவு இறுதி போட்டியில், வித்ய விகாசினி பள்ளி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில், அம்மாபாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி அணியை வென்றது. பொது பிரிவு இறுதி போட்டியில், 2 - 0 என்ற செட் கணக்கில், வித்ய விகாசினி பள்ளி அணி - ஆத்துப்பாளையம், ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அணியை வென்றது. ஜூனியர், பொதுப்பிரிவு இரண்டிலும் வித்யவிகாசினி அணியே வென்றது.

மாணவர் ஜூனியர் பிரிவில், ஏ.பி.சி., பள்ளி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில், வித்ய விகாசினி பள்ளி அணியையும், பொதுப் பிரிவில், ஏ.வி.பி., பள்ளி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில், ஆத்துப்பாளையம், வித்ய விகாசினி பள்ளி அணியையும் வென்றது. போட்டி ஏற்பாடுகளை பள்ளியின் செயலாளர் நகுலன் பிரணவ் செய்திருந்தார்.

பரிசளிப்பு விழாவுக்கு தாளாளர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். ஈரோடு வனச்சரக அலுவலர் சந்தோஷ் சுப்பிரமணியம், வாலிபால் சங்க தலைவர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி, பாராட்டினர். பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கார்த்தி கேயன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us