ADDED : மே 13, 2024 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;அர்த்தசாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம் சார்பில், விறன்மிண்ட நாயனார் குருபூஜை விழா, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று நடந்தது.
சிவாச்சாரியார்கள், 63 நாயன்மார் கல் மண்டபத்தில் உள்ள விறன்மிண்டருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் செய்தனர். சிவனடியார்கள், திருத்தொண்டத்தொகை, தேவாரம் மற்றும் திருவாசக பாடல்களை பாராயணம் செய்து வழிபட்டனர்.