sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'வீடு வீடாக அதிகாரிகள் ஆய்வு செய்ய துடிக்கிறோம் வாக்காளர் பட்டியல் குளறுபடியை வெறுக்கிறோம்'

/

'வீடு வீடாக அதிகாரிகள் ஆய்வு செய்ய துடிக்கிறோம் வாக்காளர் பட்டியல் குளறுபடியை வெறுக்கிறோம்'

'வீடு வீடாக அதிகாரிகள் ஆய்வு செய்ய துடிக்கிறோம் வாக்காளர் பட்டியல் குளறுபடியை வெறுக்கிறோம்'

'வீடு வீடாக அதிகாரிகள் ஆய்வு செய்ய துடிக்கிறோம் வாக்காளர் பட்டியல் குளறுபடியை வெறுக்கிறோம்'


ADDED : ஆக 23, 2024 10:39 PM

Google News

ADDED : ஆக 23, 2024 10:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;''வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அனைத்து வாக்காளர்களின் வீடுகளுக்கும் நேரில் சென்று, வாக்காளர் பட்டியல் விவரம் சரிபார்ப்பு பணியில் வேண்டும்; இதன் மூலம் வாக்காளர் பட்டியல் குளறுபடிகளைத் தவிர்க்க முடியும்'' என்று அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

வரும் அக்., 29ல் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, 'சுருக்கமுறை திருத்தம் - 2025' துவங்குகிறது. நவ., 28ம் தேதி வரை நடைபெறும் சுருக்கமுறை திருத்தத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், மேற்கொள்ளப்படுகிறது. வரும் ஜன., 1ம் தேதி 18 வயது பூர்த்தியாகும் இளம் வாக்களர்களும் பட்டியலில் இணைக்கப்படுகின்றனர்.

வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் முன்னிலை வகித்தார். தேர்தல் பிரிவு தனி தாசில்தார் தங்கவேல் மற்றும் ஆர்.டி.ஓ.,க்கள், தாசில்தார்கள் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்வைத்த கருத்துக்கள்:

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.,), நேர்மையோடு அனைத்து வாக்காளர் வீடுகளுக்கும் நேரடியாக சென்று, சரிபார்ப்பு பணியில் ஈடுபடவேண்டும். இறந்தோர் விவரங்களை பெற்று, பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும்.

தேர்தல் கமிஷன் பி.எல்.ஓ.,க்களை நியமித்துள்ளதுபோல், அரசியல் கட்சியினரும் நியமித்துள்ளோம். அவர்களிடம் இறந்த வாக்காளர் விவரங்களை பெற்று, உறுதிப்படுத்தி, பட்டியலில் இருந்து நீக்கம் செய்யவேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் இறப்புச்சான்று வழங்கும்போதே, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பெற்று விட வேண்டும். இரட்டைப்பதிவு உள்ளிட்ட குளறுபடிகள் களைந்து, நுாறு சதவீதம் செம்மையான வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கு, வாக்காளர் ஆதார் இணைப்பது அவசியம்; இதுகுறித்து, வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

---

கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.

ஜன., 6ல் இறுதிப்பட்டியல்

வரும் அக்., 18ம் தேதி வரை வாக்காளர் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும். பொதுமக்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் விவரங்களை சரிபார்த்து, பி.எல்.ஓ.,க்கள் வாயிலாக தேவையான திருத்தம் செய்து கொள்ளலாம். அக்., 29ல் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, நவ., 28ம் தேதி வரை சுருக்கமுறை திருத்தம் நடைபெறும். அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தங்களுக்கு, விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம். சுருக்கமுறை திருத்தம் முடிவடைந்து, வரும் ஜன., 6ம் தேதி வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.- கிறிஸ்துராஜ், கலெக்டர்








      Dinamalar
      Follow us