ADDED : பிப் 24, 2025 01:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; பல்லடம் அருகே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளுக்கு நல உதவி வழங்கப்பட்டது.
திருப்பூர் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நல உதவி வழங்கும் நிகழ்ச்சி, பல்லடம் அருகே, அருள்புரத்தில் நடந்தது. மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை தலைவர் லீலா ஜெகன் தலைமை வகித்தார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சார்ந்த குடும்பத்தினருக்கு, 50 கிலோ அரிசி சிப்பங்கள் வழங்கப்பட்டன.
மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.

