/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பசுமை காக்க என்ன தயக்கம்? கண் துடைப்பு ஏன் இன்னும்!
/
பசுமை காக்க என்ன தயக்கம்? கண் துடைப்பு ஏன் இன்னும்!
பசுமை காக்க என்ன தயக்கம்? கண் துடைப்பு ஏன் இன்னும்!
பசுமை காக்க என்ன தயக்கம்? கண் துடைப்பு ஏன் இன்னும்!
ADDED : ஆக 12, 2024 11:59 PM

திருப்பூர்:திருப்பூர், காங்கயம் ரோடு, ஜெய் நகரை சேர்ந்தவர் தனபால். 53. கடந்த சில நாட்கள் முன், இவரது வீட்டுக்கு வெளியே மரம் வளர்த்து வந்தார்.
அந்த மரத்தை வீட்டுக்கு எதிரே வசிக்கும் சிலர் வெட்டி சாய்த்தனர். இதை தனபால் தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த மரத்தை வெட்ட ஆட்களை அனுப்பிய, அ.தி.மு.க., பிரமுகரான குமார் உள்ளிட்ட சிலர், தனபாலுடன் வாக்குவாதம் செய்து, அவரை கடுமையாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
பசுமை ஆர்வலர்கள் தனபால் மீது நடந்த தாக்குதலை கண்டித்து திரண்டனர். நல்லுார் போலீசில் புகார் தெரிவித்தனர். விசாரித்த போலீசார், குமார், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். குமாரை போலீசார் கைது செய்தனர். உடனடியாக ஸ்டேஷன் ஜாமினில் விடப்பட்டார்.
கண்துடைப்பு நடவடிக்கை?
பசுமை ஆர்வலர்களின் கடுமையான எதிர்ப்புக்கு பின்புதான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. வருவாய்த்துறையினர் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. அரசியல் கட்சிகள் மத்தியில் அழுத்தம் ஏற்படவே, தொடர்ந்து வருவாய்த்துறையினர் மவுனமாக உள்ளனர்.
இதனால், மரம் வெட்டுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. பொது இடங்களில் உள்ள மரத்தை வெட்டுவது சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றம் என்று தெரிந்தும், வருவாய்த்துறையினர் உயரதிகாரிகளுக்கு தகவலை மட்டும் அளித்து விட்டு, வெட்டியவர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
கலெக்டர் தலையிட்டால் மட்டுமே, மீண்டும் இதுபோன்று நிகழ்வு அரங்கேறாது என்று பசுமை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

