sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நால்ரோட்டில் ரவுண்டானா அமையுமா? மக்கள் எதிர்பார்ப்பு கிராம மக்கள் எதிர்பார்ப்பு

/

நால்ரோட்டில் ரவுண்டானா அமையுமா? மக்கள் எதிர்பார்ப்பு கிராம மக்கள் எதிர்பார்ப்பு

நால்ரோட்டில் ரவுண்டானா அமையுமா? மக்கள் எதிர்பார்ப்பு கிராம மக்கள் எதிர்பார்ப்பு

நால்ரோட்டில் ரவுண்டானா அமையுமா? மக்கள் எதிர்பார்ப்பு கிராம மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : பிப் 28, 2025 11:12 PM

Google News

ADDED : பிப் 28, 2025 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, ; பெதப்பம்பட்டி நான்கு ரோடு சந்திப்பிலுள்ள, உயர் மின் கோபுர விளக்கை இடம் மாற்றி, ரவுண்டானா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலை மற்றும் உடுமலை-செஞ்சேரிமலை ரோடு சந்திக்கும், நான்கு ரோடு சந்திப்பு, பெதப்பம்பட்டியில் உள்ளது. இப்பகுதியில், போக்குவரத்து நெரிசலை குறைக்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில், சில ஆண்டுகளுக்கு முன்பு, அப்பகுதியில், குறிப்பிட்ட துாரத்துக்கு, சென்டர் மீடியன் வைக்கப்பட்டது. கடந்தாண்டு ஆக்கிரமிப்பும் அப்பகுதியில், அகற்றப்பட்டது.

ஆனால், உடுமலை ரோட்டில், போக்குவரத்துக்கு இடையூறாக, உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இதனால், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டும், நெரிசல் குறையவில்லை.

எனவே, சந்திப்பின் மையப்பகுதிக்கு, உயர் மின் கோபுர விளக்கை இடம் மாற்ற வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பொதுமக்கள் கூறியதாவது: பெதப்பம்பட்டி நால்ரோட்டில், நெரிசலை குறைக்க, உயர் மின் கோபுர விளக்கை மாற்றியமைக்க வேண்டும்.

சந்திப்பின் மையப்பகுதிக்கு, கோபுரத்தை இடம் மாற்றுவதால், அப்பகுதி ரவுண்டானா போல, மாறி விடும். தாராபுரம் மற்றும் உடுமலை ரோட்டுக்கு செல்லும், வாகனங்கள் எளிதாக விலகி செல்ல முடியும். இது குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மனு அனுப்பியும், நீண்ட காலமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us