ADDED : ஜூலை 27, 2025 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; வெள்ளகோவில், முத்துார், காங்கயம், புதுப்பை உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் முருங்கைகள், வெள்ளகோவிலில் இயங்கும் கொள்முதல் நிலையம் மூலம் சென்னை, கோவை, ஒட்டன் சத்திரம் மார்க்கெட்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
கடந்த வாரம், 15 டன் வந்தது. கிலோ, 10 ரூபாய்க்கு விற்றது. நேற்று, 11 டன் வந்தது. செடி முருங்கை கிலோ 7 ரூபாய்க்கும், மர முருங்கை, 8 ரூபாய்க்கும், கரும்பு முருங்கை, 12 ரூபாய்க்கும் விற்பனையானது.