ADDED : ஜன 08, 2024 01:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபழநி பாதயாத்திரை குழுவின், 13ம் ஆண்டு அன்னதான விழா, நேற்று கோல்டன்நகரில் நடந்தது.
கோல்டன்நகர், கருணாகரபுரி சக்தி விநாயகர் கோவில் அருகே, ஸ்ரீபழநி முருகன் பாதயாத்திரை குழுவினரின்,13ம் ஆண்டு அன்னதான நிகழ்ச்சி நேற்று நடந்தது. குருசாமி குருவம்மாள் தலைமையில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாநகராட்சி 2வது மண்டல தலைவர் கோவிந்தராஜ் அன்னதானத்தை துவக்கி வைத்தார். அ.தி.மு.க., நிர்வாகி சூர்யாசெந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.