sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வி.ஏ.ஓ., உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

/

வி.ஏ.ஓ., உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

வி.ஏ.ஓ., உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

வி.ஏ.ஓ., உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை


ADDED : பிப் 07, 2025 06:56 AM

Google News

ADDED : பிப் 07, 2025 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் உட்பட, இருவருக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட் தீர்ப்பளித்தது.

திருப்பூர் மாவட்டம், குன்னத்துார், காவுத்தம்பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தன். எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனையாளர். தனது நிலத்தில் தோட்டக்கலைத்துறை மானிய உதவியோடு பூச்செடிகள் பயிரிட முடிவு செய்தார். இதற்காக நிலத்துக்கு கிராம நிர்வாக அலுவலர் சான்று, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்பட்டன.

கடந்த 2011ம் ஆண்டு அந்த ஆவணங்களை பெற ஆனந்தன், காவுத்தம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தபோது வி.ஏ.ஓ., குணசேகரன், 71, என்பவர், 1,500 ரூபாய் லஞ்சம் கேட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார், 2011 நவ., 22ம் தேதி டிரைவர் சதீஷ், 41 என்பவர் வாயிலாக குணசேகரன் லஞ்ச பணத்தை பெற்ற போது கையும் களவுமாக பிடித்து, இருவரையும் கைது செய்தனர். வழக்கை விசாரித்த திருப்பூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்லதுரை, குணசேகரனுக்கும், சதீசுக்கும் தலா 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜரானார்.






      Dinamalar
      Follow us