sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காங்கேயம் அருகே நாய்கள் கடித்து 22 ஆடுகள் பலி; இழப்பீடு கோரி விவசாயிகள் சாலை மறியல்

/

காங்கேயம் அருகே நாய்கள் கடித்து 22 ஆடுகள் பலி; இழப்பீடு கோரி விவசாயிகள் சாலை மறியல்

காங்கேயம் அருகே நாய்கள் கடித்து 22 ஆடுகள் பலி; இழப்பீடு கோரி விவசாயிகள் சாலை மறியல்

காங்கேயம் அருகே நாய்கள் கடித்து 22 ஆடுகள் பலி; இழப்பீடு கோரி விவசாயிகள் சாலை மறியல்


ADDED : பிப் 13, 2025 05:53 PM

Google News

ADDED : பிப் 13, 2025 05:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம் : காங்கேயம் அருகே நாய்கள் கடித்ததில் 22 ஆடுகள் பலியானது. இதற்கு இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்திதல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

காங்கேயம் தாலூக்கா பகுதியில் கடந்த ஒரு வருடமாக கால்நடைகளை வெறிநாய்கள் கடித்து வருகிறது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் கடந்த பல மாதங்களாக தங்கள் கால்நடைகளுடன் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், காங்கேயம் தாசில்தார் அலுவலகத்திலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் போராட்டத்தை நடத்தினர். நேற்று முன்தினம் மாலை சிவன்மலை அருகே 3 வெள்ளாடுகளும், நேற்று காலை ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே ராமலிங்கபுரத்தில் 20 செம்மறி ஆடுகளையும் வெறிநாய்கள் கடித்து குதறியதில் ஆடுகள் உயிரிழந்தன.

இதையடுத்து காங்கேயம் சென்னிமலை ரோடு திட்டுபாறை அருகே பரவலசில், இறந்த ஆடுகள் அனைத்தையும் ரோட்டில் போட்டு காலை 11:00 மணி முதல் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் காங்கேயம் டி.எஸ்.பி., மாயவன் தலைமையில் காங்கேயம், வெள்ளகோவில், ஊதியூர், ஊத்துக்குளி போலிசார் குவிக்கப்பட்டனர். காங்கேயம் தாசில்தார் மேகனன், போலீசார் விவசாயிகளிடம் சமரசபோச்சுவார்ததை நடத்தினர்.

வெறிநாய்களால் உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவாதம் அளிக்கவேண்டும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் வேண்டும் என தெரிவித்தனர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், 250 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காங்கேயம் ரோட்டில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. வாகனங்களை மாற்று பாதயைில் திருப்பி விடப்பட்டனர்.






      Dinamalar
      Follow us